கருங்கல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கொத்தனார் மரணம்!

கருங்கல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கொத்தனார் மரணம்!

in News / Local

கருங்கல் அருகே மங்கலகுன்று மாங்கன்றுவிளை பகுதியை சேர்ந்தவர் சுனில், வயது 31, கொத்தனார் வேலை பார்த்து வந்த இவர் நேற்று மதியம் நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு உலகன்விளை பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

கண்டவிளை பகுதியில் சென்று கொண்டிருந்த பொது , திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரத்தில் குவித்து வைக்கப்பட்டு இருந்த ஜல்லிகற்கள் மீது ஏறி இறங்கியது. தொடர்ந்து அருகில் நின்ற தென்னை மரத்தில் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சுனிலை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கருங்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சுனில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுனிலுக்கு ரம்யா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top