தக்கலை அருகே அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டவர் பலி!

தக்கலை அருகே அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டவர் பலி!

in News / Local

தக்கலை அருகே உள்ள ராமன்பறம்பு பகுதியை சேர்ந்தவர் கிரிஷ் (38). மனநல சிகிச்சை பெற்று வந்தார். இவர் தினமும் தூக்க மாத்திரை சாப்பிடுவது வழக்கம். கடந்த 9ம் தேதி வழக்கத்திற்கு மாறாக அளவுக்கு அதிமான தூக்க மாத்திரைகள் சாப்பிட்டுள்ளார். இதில் உடல் நிலைபாதிக்கப்பட்ட அவரை, உறவினர்கள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கிரிஷ் இறந்தார். இது குறித்து அவரது சகோதரர் அளித்த புகாரின்படி தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top