வீடு புகுந்து பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

வீடு புகுந்து பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

in News / Local

கீரிப்பாறை அருகே உள்ள பால்குளம் ஈட்டி மூடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி (36).சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (27) என்பவர், வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு மாரியப்பனையும், மகேஸ்வரியையும் ஆபாசமாக திட்டி தகராறு செய்து கொண்டு இருந்தார். அப்போது வீட்டில் இருந்த மகேஸ்வரி, எங்களை ஏன் திட்டுகிறாய். இங்கிருந்து செல் என கூறி கதவை அடைத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ், திடீரென வீட்டின் கதவை தள்ளி, உள்ளே நுழைந்து மகேஸ்வரியின்கையை பிடித்து இழுத்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.

மகேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வந்தனர். பின்னர் மகேஸ்வரியை மிரட்டி விட்டு ராஜேஷ் தப்பினார். இது குறித்து மகேஸ்வரி, கீரிப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜ சுந்தர் மற்றும் எஸ்.எஸ்.ஐ. ராஜ எபனேசர் ஆகியோர் விசாரணை நடத்தி, ராஜேஷ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top