கன்னியாகுமரி அருகே  5-ம் வகுப்பு மாணவனுடன் ஓரினச்சேர்க்கை - தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை!

கன்னியாகுமரி அருகே 5-ம் வகுப்பு மாணவனுடன் ஓரினச்சேர்க்கை - தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை!

in News / Local

கன்னியாகுமரி அருகே சந்தையடி இடையன்விளையை சேர்ந்தவர் செபசெல்வின் என்ற ஜெபா (வயது 27), தொழிலாளியான இவர் சமையல் வேலைக்கு சென்று வந்தார். இவர் கடந்த 14-6-2015 அன்று 5-ம் வகுப்பு படிக்கும் மாணவனை செபசெல்வின் தனது வீட்டுக்கு அழைத்து சென்று, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். செபசெல்வினின் செய்கைகளால் அதிர்ந்து போன அந்த மாணவன் கத்தி கூச்சலிட்டான்.

அவனது சத்தம் கேட்டு, அவனுடைய தாயார் அங்கு ஓடி வந்து மகனை மீட்டார். இதுபற்றி கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செபசெல்வினை கைது செய்தனர்.

இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி (பொறுப்பு) நம்பி விசாரணை நடத்தி வந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அப்போது குற்றம் சாட்டப்பட்ட செபசெல்வினுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி நம்பி உத்தரவிட்டார். மேலும் அவருக்கு 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் நடராஜமூர்த்தி ஆஜராகி வாதாடினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top