ஏடிஎம் இயந்திரத்திற்கு பதிலாக பாஸ்புக் பிரிண்ட் செய்யும் இயந்திராதை உடைத்து ஏமாந்து போன கொள்ளையன்!

ஏடிஎம் இயந்திரத்திற்கு பதிலாக பாஸ்புக் பிரிண்ட் செய்யும் இயந்திராதை உடைத்து ஏமாந்து போன கொள்ளையன்!

in News / Local

சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

அங்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வங்கியின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அந்த மர்ம நபர்ஏற்கனவே தப்பிச் சென்றுவிட்டார். மேலும் அங்கிருந்த 3 இயந்திரங்களில் 2 ஏடிஎம் இயந்திரங்கள் அப்படியே இருக்க, பாஸ்புக் பிரிண்ட் செய்யும் இயந்திரம் மட்டும் உடைக்கப்பட்டிருந்துள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான கொள்ளையனின் புகைப்படத்தை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top