பூதப்பாண்டி அருகே 2 குழந்தைகளின் தாய் தற்கொலை

பூதப்பாண்டி அருகே 2 குழந்தைகளின் தாய் தற்கொலை

in News / Local

பூதப்பாண்டியை அடுத்த இறச்சகுளம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெகன். கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி(40). இவர்களுக்கு ஆண், பெண் என 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கடன் பிரச்னை காரணமாக செல்வி கடந்த 12ம் தேதி வீட்டில் வைத்து விஷம் குடித்துள்ளார்.

அவரை குடும்பத்தார் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை செல்வி இறந்தார். இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரித்து வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top