மார்த்தாண்டம் அருகே காஞ்சிரங்கோடு சிராயன்குழி அக்கரைவிளையை சேர்ந்தவர் சுனில் (35), சம்பவத்தன்று பைக்கில் மார்த்தாண்டம் வந்துள்ளார். அங்குள்ள பிரபல ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் முன் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார்.
திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்தும் எந்தவித தகவலும் இல்லை. இதைத்தொடர்ந்து சுனில் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்,
0 Comments