சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் அரசன். இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு இளையராஜா (30) என்ற மகன் உள்ளார். இவர்கள் தற்போது மும்பை இந்திராநகர் தெருவில் வசித்து வருகின்றனர். இளையராஜாவிற்கு உடல் நலம் சரியில்லை என கூறப்படுகிறது. இதனால் குடும்பத்துடன் குழித்துறையில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்திற்கு இளையராஜா, அவரது தாய் பானுமதி, தாத்தா சோலையப்பன், உறவினர் சுரேஷ் ஆகியோர் மும்பையில் இருந்து வந்துள்ளனர்.சம்பவத்தன்று குழித்துறை யில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்றுவிட்டு, சேலத்திற்கு செல்வதற்காக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர்.
பின்னர் அவர்கள் 4 பேரும் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக நின்று கொண்டு இருந்தனர். அப்போது ரயில் எப்போது வரும் என கேட்க பானுமதியும், சுரேசும் தகவல் மையத்திற்கு சென்றனர். சோலையப்பனுடன், இளையராஜா நின்று கொண்டு இருந்தார். தகவல் மையத்திற்கு சென்ற பானுமதியும், சுரேசும் வந்து பார்க்கும்போது இளையராஜாவை காணவில்லை . பல இடங்களில் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை . இது குறித்து பானுமதி நாகர்கோவில் ரயில்வே போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் கேத்ரின்சு ஜாதா வழக்குபதிவு செய்து மாயமான இளையராஜாவை தேடி வருகின்றனர்.
0 Comments