சென்னை கோயம்பேடு தெற்கு ரதவீதியை சேர்ந்த ஏழுமலை (வயது 42). இவர் சென்னையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தொழில் சம்பந்தமாக சீனிவாசன் என்பவருக்கு , ஏழுமலைக்கும் பழக்கம் ஏற்பட்டது.
ஏழுமலை, தன்னிடம் பணம் முதலீடு செய்தால் அந்த பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகவும், பல நபர்களை சேர்த்து விட்டால் தற்குரிய கமிஷன் தருவதாகவும் கூறினார். இந்த ஆசைவார்த்தைகளை நம்பி சீனிவாசன் ரூ.84 லட்சத்து 85 ஆயிரத்து 700-ஐ ஏழுமலை வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.
பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் ஏழுமலை சொன்னபடி இரட்டிப்பாக்கி தராமல். கொடுத்த பணத்தை கேட்ட போது பணத்தையும் தராமல் ஏமாற்றி வந்தார்.
இதற்கு உடந்தையாக ஏழுமலை மனைவி சித்ரா, சென்னையை சேர்ந்த முருகன், கலை மற்றும் தமிழ் ஆகியோரும் இருந்தனர். அந்த பணத்தை பெற்றுத்தர அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் சீனிவாசன் மனு அளித்தார்.
இதையடுத்து ஏழுமலை, அவரது மனைவி சித்ரா உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments