சாமிதோப்பை அடுத்த காமராஜபுரத்தை சேர்ந்தவர் முருகன் மகள் சாந்தினி (20).இவருக்கும் துத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.இந்நிலையில் பெற்றோர் வீட்டுக்கு வந்த சாந்தினி மாயமானார்.
பல இடங்களில் தேடியும் அவரை பற்றி தகவல் கிடைக்காததால் முருகன் தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார்.சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜன் வழக்கு பதிவு செய்து புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.
0 Comments