கன்னியாகுமரி தொகுதியில் அ.ம.மு.க, மக்கள் நீதிமய்யம் காட்சிகளை பின்னுக்கு தள்ளி 3வது இடத்தை பிடித்தது நாம் தமிழர் கட்சி!

கன்னியாகுமரி தொகுதியில் அ.ம.மு.க, மக்கள் நீதிமய்யம் காட்சிகளை பின்னுக்கு தள்ளி 3வது இடத்தை பிடித்தது நாம் தமிழர் கட்சி!

in News / Local

கன்னியாகுமரி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 28 சுற்றுகளாக விறுவிறுப்பாக நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எச்.வசந்தகுமார் வெற்றி பெற்றார்.

அதே சமயத்தில் 3-வது இடத்தை பிடிப்பதில் அ.ம.மு.க.வுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே போட்டி நிலவியது. அ.ம.மு.க. தான் அதிக வாக்குகள் பெறும் என்று பலரும் கூறிய நிலையில், அனைத்தையும் பொய்யாகி அ.ம.மு.க.வை விட நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

அதாவது அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்ட லட்சுமணனை காட்டிலும் அதிக வாக்குகளை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயன்றீன் பெற்றுள்ளார். முதல் சுற்றில் இருந்தே அ.ம.மு.க.வை விட நாம் தமிழர் கட்சி முன்னிலையில் இருந்தது. அதாவது முதல் சுற்று முடிவில் நாம் தமிழர் கட்சி 645 வாக்குகளையும், அ.ம.மு.க. 430 வாக்குகளையும் பெற்று இருந்தது. 26-வது சுற்று முடிவில் நாம் தமிழர் கட்சி 15 ஆயிரத்து 887, அ.ம.மு.க. 11 ஆயிரத்து 611 வாக்குகள் பெற்றிருந்தன. அதே சமயத்தில் மக்கள் நீதிமய்யம் கட்சிக்கு 8 ஆயிரத்து 106 ஓட்டுகள் கிடைத்தது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top