நாகர்கோவில் மருத்துவமனையில் நர்ஸ் மரணம்

நாகர்கோவில் மருத்துவமனையில் நர்ஸ் மரணம்

in News / Local

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவனையில் நர்ஸ் ஒருவர் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நர்ஸ் அனுஜா குமாரி திருவட்டார் அருகே வியனூரை சேர்ந்தவர். நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த அனுஜா அதிகாலையில் 3வது மாடியில் இருந்து திடீரென கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் தள்ளிவிட்டார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் அனுஜா குமாரி அணிந்திருந்த நகைகள் மாயமாகியிருப்பதால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போது, அனுஜா குமாரி பணியாற்றி வந்த மருத்துவமனையில் மற்றொரு நர்ஸ்சின் நகையும் திருடு போனதாக புகார் எழுந்துள்ளது. எனவே நகைக்காக கொலை நடைபெற்றதா? என்ற கோணத்தில் நாகர்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top