மார்த்தாண்டம், அருகே காப்புக்காடு விளாத்திவிளை பகுதியை சேர்ந்தவர் ரசல் ராஜ்(53). களியக்காவிளை தையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ராஜ். இவர் ரசல்ராஜ் மகனுக்கு ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 72 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் வேலை எதுவும் வாங்கி கொடுக்காமல் ஓராண்டு காலம் இழுத்தடித்து வந்துள்ளார். கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.
இந்த நிலையில் சென்னித்தோட்டம் பகுதியில் கிறிஸ்டோபர் ராஜ் வந்துள்ளார். அப்போது அவரை பார்த்த ரசல்ராஜ் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த கிறிஸ்டோபர் ராஜ், அரிவாளால் ரசல்ராஜை வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் குறித்த புகாரின்பேரில் மார்த்தாண்டம் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரித்து வருகிறார். கிறிஸ்டோபர் ராஜ் மார்த்தாண்டம் வெட்டு வெந்நி தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தில் புகுந்து ஆவணங்களை எரித்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார்.
0 Comments