ஆரல்வாய்மொழி அருகே முதியவர் மீது தாக்குதல்!

ஆரல்வாய்மொழி அருகே முதியவர் மீது தாக்குதல்!

in News / Local

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை வீரமார்த்தாண்டன் பகுதியை சேர்ந்தவர் நடராஜன்(62). இவரது வீட்டு வேலை நடந்து வருகிறது. அதற்கான டைல்ஸ்களை வாங்கி வந்து அந்த பகுதியில் உள்ள பிள்ளையார் கோயிலில் அடுக்கி வைத்துள்ளார். இதற்கு தெற்குத்தெருவை சேர்ந்த மதன் (33) மற்றும் அவரது தம்பி வினோத் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மதன், நடராஜனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். மேலும் காயமடைந்த நடராஜனை பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட் டார்.சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனை கைது செய்தனர். வினோத் தலைமறைவாகி விட் டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்,

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top