தக்கலை அருகே முதியவருக்கு மிரட்டல்!

தக்கலை அருகே முதியவருக்கு மிரட்டல்!

in News / Local

தக்கலை அருகே பள்ளியாடி திருப்பன்னிப்பாகம் கோயில் ரோட்டில் வசித்து வருபவர் சாமுவேல் வில்சன் (60). இவரது வீட்டின் முன் பள்ளியாடி வாழைத்தோட்டத்தை சேர்ந்த ஸ்டீபன் (45) என்பவர் டெய்லர் கடை நடத்தி வருகிறார். ஸ்டீபன் தினமும் மது அருந்தி விட்டு ஆபாசமாக பேசுவது வழக்கம். இதனை சாமுவேல் வில்சன் தட்டி கேட்டதில் அவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சாமுவேல் வில்சன் மனைவியுடன் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ஸ்டீபன் அவரை தடுத்து நிறுத்தி தகாத வார்த்தைகள் பேசியதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் ஸ்டீபன் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top