வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி: ஓபிஎஸ் - இபிஎஸ்

வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி: ஓபிஎஸ் - இபிஎஸ்

in News / Local

நடைபெற்று முடிந்த நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்த தமிழக மக்களுக்கு நன்றி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுக ஆயிரங்காலத்து பயிராக தழைத்து மக்கள் பணியாற்றும். ஜனநாயக ஆட்சி முறையில் தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்று பத்திரமாகும். கொள்கைகளில் சமரசமின்றி தமிழக உரிமைகளை காக்க மக்களின் வளமான வாழ்க்கைக்கு அரசு பணியாற்றும். தேர்தல் வெற்றி உற்சாகத்தையும் எதிர்காலத்தில் சிறப்பாக பணியாற்ற உறுதியையும் அளிக்கிறது’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top