குமரி அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம் அமைக்கப்படும்.! தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிக்கை;

குமரி அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம் அமைக்கப்படும்.! தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிக்கை;

in News / Local

குமரிமாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய குழித்துறை மற்றும் தக்கலை அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம் அமைக்கப்படும் என தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கூறியுள்ளார் .

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ;

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் நோயை தடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, மக்கள் நலனை மையமாக கொண்டு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .அதனடிப்படையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகளில் மட்டுமன்றி தனிநபர் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற மருத்துவமனை கட்டணத்தை அரசே காப்பீடு திட்டத்தின் கீழ் ஏற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் அதிக அளவு தேவைப்படுவதால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் அவர்களுக்கு தமிழ் நாட்டிற்கு அதிக அளவு ஆக்சிஜன் தேவைப்படுவதை குறியீட்டு தமிழ் நாட்டிற்கு தேவையான ஆக்சிஜன் வழங்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார் .அதேபோல் குமரி மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த இரண்டு வாரங்களாகவே தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிசன் தேவை அதிகமாக உள்ளது.

மேலும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் தேவைக்கேற்ப ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது. குமரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை முழுமையாக அழிக்கப்பட்டு நோய் முற்றிலும் குணமான உடனேயே அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை .

மக்கள் நலனுக்காகவே இந்த அரசு முழு மூச்சாக செயல்பட்டு வருகிறது .அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் நலன் கருதி செயல்பட்டு வரும் மருத்துவர்கள் , செவிலியர்கள் , மருத்துவ பணியாளர்கள் , காவல்துறையினர் ,அரசு அலுவலர் , மாநகராட்சி அலுவலர்கள் ,தூய்மைப் பணியாளர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்து மக்களுக்காக சேவையாற்றி வருகின்றனர் .

பொதுமக்கள் இதனை உணர்ந்து முகக் கவசங்கள் ,சமூக இடைவெளியை கடைபிடித்து விழிப்புடன் இருந்து கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றிட தமிழ்நாடு அரசிற்கும் , மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் .ஆக்சிசன் தட்டுப்பாட்டை தடுத்து நிறுத்த குமரியில் தக்கலை மற்றும் குழித்துறை ஆகிய மருத்துவமனைகளில் ஆக்சிசன் தயாரிப்பு மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top