மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கு பொன் விழா நடத்த வேண்டும் என்று பச்சை தமிழகம் வலியுறுத்தியுள்ளது. பச்சை தமிழகம் கட்சி மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மாத்தூர் தொட்டிப்பாலம் சிற்றாறு பட்டணம் கால்வாயில் தண்ணீர் கொண்டு செல்வதற்காக மாத்தூர் பகுதியில் பரளியாற்றின் குறுக்கே இரு மலைக்குன்றுகளை இணைத்து கட்டப்பட்டுள்ளது. இது ஆசியாவிலேயே நீளமானதும், உயரமானதுமாகும். தினமும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஆனால் தொட்டிப் பாலத்தின் தடுப்புதூண்கள் பல இடங்களி ல் உடைந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. மேலும் நீர்க்கசிவும் ஏற்பட்டு வருகிறது. காமராஜர் ஆட்சி காலத்தில் இந்த தொட்டிப்பாலம் கட்டப்பட்டது. பாலத்தை பராமரிக்க வேண்டும். காமராஜரின் சாதனையை விளக்கும் வகையில், மாத்தூர் தொட்டிப்பாலத்தின் நுழைவு வாயிலில் அவருக்கு சிலை அமைத்து, தொட்டிப்பாலத்துக்கு பொன்விழா கொண் டாட வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
0 Comments