பிரதமர் மோடி வருகிற 19-ந் தேதி குமரி மாவட்டம் வருகை!

பிரதமர் மோடி வருகிற 19-ந் தேதி குமரி மாவட்டம் வருகை!

in News / Local

பிரதமர் மோடி வருகிற 19-ந் தேதி குமரி மாவட்டம் வருகிறார். அப்போது ரூ.40 ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி வருகிற 10-ந் தேதி திருப்பூருக்கும், 19-ந் தேதி கன்னியாகுமரிக்கும் வரவிருக்கிறார். அவர் வரும் போது பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க இருக்கிறார். எனவே விழா நடைபெறுவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

கன்னியாகுமரியில் நான்கு வழிச்சாலை நிறைவடையும் ஜீரோ பாயிண்ட் பகுதி கடந்த முறை பிரதமர் மோடி கலந்து கொண்ட விழா நடந்த இடம். இந்த முறை நாகர்கோவிலில் உள்ள மேலும் சில இடங்களை பரிசீலனையில் உள்ளது.

கன்னியாகுமரியில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- குமரி மாவட்டத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் திட்டங்களை மோடி தந்துள்ளார். அந்த திட்டங்களை தொடங்கி வைப்பதற்கும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் விழா நடத்தப்படுகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top