2014ம் ஆண்டு எஸ்பி பட்டினம் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக காளிதாஸ் என்பவர் பணிபுரிந்து வந்தார். அப்போது எஸ்பி பட்டினம் காவல் நிலையத்தில் செய்யது முகமது என்கிற விசாரணைக் கைதியை சுட்டுக் கொன்றதாக எஸ்.ஐ காளிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது..
இந்த வழக்கில் நேற்று ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது விசாரணை கைதியைச் சுட்டுக் கொன்றதாக எஸ்.ஐ.காளிதாசுக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், காவல் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட செய்யது முகமதுவின் குடும்பத்திற்கு எஸ்.ஐ.காளிதாஸ் ரூ.2 லட்சம் தரவேண்டும் என்றும். இந்த தொகையை வசூலித்து செய்யது முகமதுவின் குடும்பத்திற்கு கொடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
0 Comments