நாகர்கோவிலில் வீட்டில் வைத்து விபச்சாரம் - புரோக்கர் கைது!

நாகர்கோவிலில் வீட்டில் வைத்து விபச்சாரம் - புரோக்கர் கைது!

in News / Local

நாகர்கோவில் வடக்கு கோணம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்குறிய வகையில் பெண்கள், வாலிபர்கள் வந்து செல்வதாக ஆசாரிபள்ளம் போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த வீட்டில் ஒரு பெண்ணும், 2 வாலிபர்களும் இருப்பது தெரியவந்தது இதையடுத்து,போலீசார் அந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது பணக்குடி அண்ணா நகரை சேர்ந்த ராகுல் என்பவர் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்தார். அவர்களை போலீசார் பிடித்தனர். விபசாரம் நடத்த புரோக்கராக செயல்பட்டபணகுடியை சேர்ந்த ராஜேஷ்(28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top