தேங்காய்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற போது கடலுக்குள் மாயமான 11- மீனவர்கள் இன்று சொந்த ஊர் திரும்பினர்.குமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் துறைமுகத்தில் இருந்து கடந்த 9-ந்தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக நடு கடலில் கப்பல் மோதி வள்ளவிளை மீனவர்கள் சென்ற படகு விபத்து ஏற்பட்டு 11 மீனவர்கள் காணாமல் மாயமாகினர்.
இதனையடுத்து காணாமல் போன மீனவர்களை கண்டுப்பிடித்து தர வேண்டி மீனவர்களின் உறவினர்கள் ,அரசியல் கட்சி பிரமுகர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட படகில் பயணம் செய்த குமரிமாவட்டம் வள்ளவிளையை சேர்ந்த 11 மீனவர்கள் பத்திரமாக இருப்பதாக கடந்த வாரம் கடலோர பாதுகாப்பு குழு போலீசார் தெரிவித்திருந்தனர்.அவர்களை மீட்டு வர கர்நாடக கப்பல் படையினர் சென்ற நிலையில் இன்று 11 மீனவர்களும் சொந்த ஊர் திரும்பினர்.அவர்களை உறவினர்கள் நண்பர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
0 Comments