தக்கலையில் தகவல் அறியும் உரிமைச்சட்ட பயிற்சி நடந்தது. குமரி மாவட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட பயனாளிகள் சங்கம் மற்றும் சென்னை இந்தியன் குரல் அமைப்பு இணைந்து தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 குறித்த பயிற்சி அரங்கு நடத்தினர்.
சங்க தலைவர் பால் ராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் நாகப்பன் முன்னிலை வகித்தார். செயலாளர் லெனின் வரவேற்றார். சட்ட ஆலோச கர் விஜயகுமார் வாழ்த்திப் பேசினார். இந்தியன் குரல் அமைப்பின் தென் மண்டல பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த பயிற்சியளித்தார். இதில் மாணவர்ள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
0 Comments