அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தியவர் கைது

அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தியவர் கைது

in News / Local

கன்னியாகுமரி மாவட்டம், கடுகரை விலக்கில் நேற்று பூதப்பாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மாரிச்செல்வம் தலைமையில் காவலர்கல் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போ வாகனத்தை சோதனை செய்தனர்.

அப்போது அந்த வண்டியில் மைக்கேல்(40), தங்கராஜ், பொன்ராஜ், ராஜேந்திரன் ஆகியோர் சட்டவிரோதமாக அனுமதியின்றி ஆற்றுமணல் கடத்தியது தெரியவந்தது. உடனடியாக தங்கராஜ், பொன்ராஜ், ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினர்.ஆனால் மைக்கேல் போலீசாரிடம் சிக்கிக்கொண்டார்..

பிடிபட்ட மைக்கேலை கைது செய்து வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர், மேலும் மணல் கடத்தப்பட்ட வண்டியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும்,. தப்பியோடிய தங்கராஜ், பொன்ராஜ், ராஜேந்திரன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top