கன்னியாகுமரியின் தலைநகரம் நாகர்கோவில். எந்த ஊரிலும் இல்லாத ஒரு சிறப்பு நாகர்கோவிலில் தயாரிக்கப்படும் சுத்தமான மொறு மொறு நேந்திரம் சிப்ஸ்க்கு உண்டு. இந்த சிப்ஸ் அனைத்து வகை சைவ உணவுக்கும் ,ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிப்ஸ் சாப்பிடலாம்.அதுவும் நாகர்கோவில் சிப்ஸ் ஒரு தனி டேஸ்ட்.
நாகர்கோவிலில் சிப்ஸ் தயாரிப்பது நுட்பமான கலையாக கையாண்டு வருகிறார்கள். இந்த சிப்ஸில் சுவை மட்டுமல்ல , உடலுக்கு ஜீரன சக்தியும் தரும் ஒரு மருத்துவ குணமும் உள்ளது.ரஸ்தாலி, பூவன், கற்பூரவல்லி, மலை, பேயன், பச்சை, பெங்களூர் பச்சை, கதலி, மொந்தன், நேந்திரன், கப்பி,மட்டி சிறுமலை, செவ்வாழை போன்ற அறிய வகை வாழைப் பழங்கள் உட்பட 24 வகை வாழைகள் குமரியில் பயிரிடப்படுகிறது.
0 Comments