நாகர்கோவில் பிரசவித்த பெண் திடீர் சாவு…!

நாகர்கோவில் பிரசவித்த பெண் திடீர் சாவு…!

in News / Local

நெல்லை மாவட்டம் ராதாபுரம் செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன்(வயது 42). இவருடைய மனைவி பாக்கிய தேவி (36). சம்பவத்தன்று பாக்கிய தேவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நேற்று முன்தினம் அவருக்கு குழந்தை பிறந்தது. நேற்று திடீரென பாக்கிய தேவியின் உடல் நிலை மோசமடைந்தது.

இதனைதொடர்ந்து அவரை மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை பெற்றெடுத்த மறுநாளே தாய் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top