குழித்துறை அருகே டாஸ்மாக் கடைக்கு தீ வைப்பு!

குழித்துறை அருகே டாஸ்மாக் கடைக்கு தீ வைப்பு!

in News / Local

குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் டாஸ்மாக் கடை ஓன்று உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து விட்டு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர்.

நேற்று அதிகாலை 3 மணியளவில் கடையில் இருந்து கரும்புகை வந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு போலீசாரும், கடையின் ஊழியர்களும் விரைந்து வந்தனர்.

ஊழியர்கள் கடையை திறந்து பார்த்தபோது அங்கிருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் தீயில் எரிந்து நாசமானது தெரியவந்தது. மேலும், போலீசார் கடையை ஆய்வு செய்தனர். அப்போது, கடையின் ‌ஷட்டரின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கடைக்கு தீ வைத்தது தெரியவந்தது.

இதுபற்றி டாஸ்மாக் கடையின் மேலாளர் பால்துரை களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top