தக்கலை அருகே ஸ்கூட்டர் மீது டெம்போ மோதியதில் பாலிடெக்னிக் கல்லூரி ஊழியர் பலி!

தக்கலை அருகே ஸ்கூட்டர் மீது டெம்போ மோதியதில் பாலிடெக்னிக் கல்லூரி ஊழியர் பலி!

in News / Local

தக்கலை அருகே ராமன்பரம்பு பகுதியை சேர்ந்தவர் அழகேஷ்(வயது 48). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு லதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அழகேஷ் தினமும் கல்லூரிக்கு ஸ்கூட்டரில் வருவது வழக்கம்.

நேற்று காலையும் வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். அப்போது,
குமாரகோவில் சந்திப்பில் உள்ள தூவல்ஆற்று பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது , சாலையில் வைக்கப்பட்டு இருந்த தடுப்புகம்பியை கடக்க முயன்றார். அப்போது, எதிரே நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்துகொண்டிருந்த மினி டெம்போ எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அழகேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஹெல்மெட் அணிந்து இருந்தபோதும் அது உடைந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்..

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனே, தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர். அழகேஷின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே மினி டெம்போ டிரைவர் மதுரையை ேசர்ந்த தமின் அன்சாரி (33) தக்கலை போலீசில் சரண் அடைந்தார். போலீசார் வழக்குப்பதிவு ெசய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top