குமரியில் இரண்டு நாட்கள் கனமழை ... ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்கள் 14- ந்தேதிக்குள் கரை திரும்ப வேண்டும்..ஆட்சியர் உத்தரவு;

குமரியில் இரண்டு நாட்கள் கனமழை ... ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்கள் 14- ந்தேதிக்குள் கரை திரும்ப வேண்டும்..ஆட்சியர் உத்தரவு;

in News / Local

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த அழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால்குமரி கடல் பகுதியில் இரண்டு நாளைக்கு கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து குமரிமாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-12 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்களுக்கு தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும் நாளை (13-5-2021) அன்று தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகள் லட்ச தீவுகள் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய கடற்பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும்.

14 மற்றும் 15ம் தேதிகளில் இரண்டு நாட்களுக்கு தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகள் லட்சத் தீவுகள் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய கடற்பகுதியில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும் 14ஆம் தேதியன்று தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து 16ஆம் தேதியன்று கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் புயலாக உருவெடுக்கக் கூடும்.

இதன் காரணமாக குமரி கடல் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதி லட்சத்தீவுகள் மற்றும் மால தீவுகள் கடல் பகுதிகள் மற்றும் இந்திய பெருங்கடல் ஆகிய கடற்பகுதியில் 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்களுக்கு கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே மீனவர்கள் மேற்கூறிய நாட்களில் மேற்கூறிய கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக ஏற்கனவே கடலுக்குள் சென்று உள்ள மீனவர்கள் 14 ஆம் தேதி அன்று காலைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என ஆட்சித் தலைவர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top