2021-ல் 234 தொகுதிகளிலும் நாங்க தான் என்று விஜய் ரசிகர்கள் ஒட்டிய அரசியல் போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. விஜய்யின் 64-வது படமாக உருவாகிவரும் இந்தப் படத்துக்கு மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் படத்தைத் திரைக்குக் கொண்டு வர படக்குழு முடிவு செய்திருக்கிறது.
இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் கடந்த 15-ம் தேதி செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்தப் போஸ்டரிலும் நடிகர் விஜய் மட்டுமே கருப்பு நிற உடையில் தோன்றியுள்ளார். அதில், வாயில் விரல் வைத்து அமைதியாக இருங்கள் என்று விஜய் கூறுவது போல இருந்தது. இந்நிலையில் அந்த போட்டோவை வைத்து விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒன்று ஒட்டியுள்ளனர். அதில், 234 தொகுதியிலையும் சைலண்டா இருக்கனும். 2021-ல் நாங்க தான் இருக்கனும். மக்கள் பணி செய்ய வரும் மாஸ்டர் மாண்புமிகு தளபதி என்று குறிப்பிட்டிருந்தது.
தமிழக அரசியல் குறித்து தொடர்ந்து விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விமர்சித்து வரும் நிலையில் ரசிகர்கள் ஒட்டிய இந்த போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments