சமூக வளைதளங்களில் நாகர்கோவில் ஆணையர் சரவணகுமார் அவர்களுக்கு ஆதரவாக மீண்டும் நாகர்கோவிலில் அவர் வேண்டும் #WewantSaravanakumarSir என்ற வசனம் மற்றும் ஹாஷ் டேக் உடன் போர்க்கொடி பிடிக்க ஆரம்பித்திருக்கும் முகநூல்வாசிகள் !
நாகர்கோவில் மாநகராட்சியை கடந்த மூன்று வருடங்களுக்கு மேல் சிறப்பாக நிர்வகித்து மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் திரு.சரவணகுமார் அவர்களுக்கு பதிலாக புதிய ஆஷா அஜித் ஐ.ஏ.எஸ் அதிகாரியை மாநகராட்சி ஆணையராக இந்த நோய்த்தொற்று காலத்தில் அறிவித்திருக்கிறார்கள்!!
இது நாகர்கோவில் மாநகராட்சி உட்பட்ட மக்களுக்கு பெரும் பாதிப்பை உருவாக்கும்.
ஊழலற்ற நேர்மையான மக்கள் பணியை சிறப்பாக செய்துவரும் திரு.சரவணகுமார் அவர்களை இந்த நேரத்தில்…….
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக சிறப்பான மக்கள் பணி செய்து வரும் திரு.சரவணகுமார் அவர்களின் பணியிடமாறுதலை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்!!
இந்தப் கொரானா தொற்றுக் காலத்தில் சிறப்பான முன்னுதாரணமான நடவடிக்கைகளை எடுத்து மக்கள் மத்தியில் அச்சத்தை போக்கிய அவர் இன்னும் நாகர்கோவிலில் தனது பணியை தொடர வேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக உள்ளது.
0 Comments