பெண்கள் மோதல், கத்தியால் வெட்டு!

பெண்கள் மோதல், கத்தியால் வெட்டு!

in News / Local

அஞ்சுகிராமம், மயிலாடி பகுதியை சேர்ந்தவர் ரீத்தம்மாள், வயது 70. மீன் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரிடம், அதே ஊரைச் சேர்ந்த பார்வதி மீன் வாங்குவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் பார்வதி ரீத்தம்மாளிடம் மீன் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பார்வதியிடம் அவர் கேட்டபோது அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதையடுத்து இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரம் அடைந்த பார்வதி பக்கத்தில் கிடந்த கத்தியை எடுத்து ரீத்தாம்மாளை வெட்டி உள்ளார். இதில் காயம் அடைந்தவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். இது தொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top