இளம் பெண் தற்கொலை முயற்சி!

இளம் பெண் தற்கொலை முயற்சி!

in News / Local

மார்த்தாண்டம் கோட்டகம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லன்(55), தொழிலதிபர். இவரது மகன் அனீஷ் (29). திக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஷைனி (28). இவரது கணவர் பிரபு.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனீஷ் ஷைனியை திருமணம் செய்வதாக கூறி நெருக்கமாக பழகியுள்ளார் அவர்கள் நெருக்கமாக இருந்த போது செல்போனில் படங்கள் எடுத்துள்ளார். மேலும் ஷைனியிடம் இருந்து ரூ 70 ஆயிரம் வரை வாங்கியுள்ளார். பின்னர் அனீஷ் வேறு திருமணம் செய்து கொண்டார்.

இதனால் ஏமாற்றப்பட்ட ஷைனி, அடிக்கடி பணத்தை திருப்பித்தருமாறு அனீஷிடம் கேட்டு வந்துள்ளார். அப்போது அனிஷ் செல்போனில் உள்ள படங்களை பிறரிடம் காட்டி அசிங்கப்படுத்திவிடுவதாக கூறி ஷைனியை மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் ஷைனி பணம் கேட்டுச்சென்றார். அப்போது அனீஷ் மற்றும் அவரது தந்தை செல்லன் அவதூறாக பேசி ஷைனியை தாக்கி மிரட்டியுள்ளனர். மனம் உடைந்த ஷைனி அங்கேயே விஷமாத்திரை அருந்தி மயங்கி விழுந்தார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அனீஷ் மற்றும் செல்லன் மீது மார்த்தாண்டம் எஸ்ஐ வினீஷ்பாபு வழக்குப்பதிவு செய்தார் இதில் அனீஷ் கைது செய்யப்பட்டார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top