தக்கலை அருகே முத்தலக்குறிச்சியை சேர்ந்தவர் ஐயப்பன். குடிப்ழக்கம் இருப்பதாக தெரிகிறது. இவரது மனைவி பிந்து (34). பிந்து பெயரில் வங்கியில் இருக்கும் பணத்தை வங்கியில் இருந்து எடுத்து தர கேட்டு ஐயப்பனும்,அவரது சகோதரர் கோபுவும் மிரட்டியுள்ளனர், இதற்கு பிந்து மறுப்பு தெரிவிக்கவே, இருவரும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்தவர் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக தக்கலை போலீசார் ஐயப்பன்,கோபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
0 Comments