புதுக்கடை அருகே பைக் கவிழ்ந்து பெண் பலி!

புதுக்கடை அருகே பைக் கவிழ்ந்து பெண் பலி!

in News / Local

புதுக்கடை அருகே அம்சி வழுதூர் வடக்கு பகுதியை சேர்ந்தவர் வர்க்கீஸ். இவரது மனைவி பாத்திமா ராணி(42). இவர்களது மகன் பெனோ சஜின். கடந்த 17ம்தேதி பாத்திமா ராணி, மகன் பெனோ சஜினுடன் பைக்கில் அதங்கோட்டில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றார். பின்னர் மறு நாள் தாயும், மகனும் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியில் வந்தபோது, பைக் திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்த து - இதில் பாத் திமா ராணியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்து வமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்குசிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு பாத்திமா ராணி இறந்தார். இது குறித்து புதுக் கடைபோலீசார்வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top