மார்த்தாண்டம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை, கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு!

மார்த்தாண்டம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை, கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு!

in News / Local

மார்த்தாண்டம் ஆஸ்சா மன்சில் பகுதியை சேர்ந்தவர் சுமையா பீவி. ரவிப்புதூர்க்கடை குருவிளைக்காடு பகுதியை சேர்ந்தவர் முகமது பர்கான். இவர்கள் இருவருக்கும் கடந்த 2015ல் திருமணம் நடந்துள்ளது.

முகமது பர்கான் அபுதாபியில் ரூ.1.50 லட் சம் சம்பளத்தில் வேலை பார்த்து வருவதாகவும், அதனால் 150 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கேட்டுள்ளனர். இதையடுத்து 100 பவுன் நகைகள், ரூ.7 லட்சம் ரொக்கம் சுமையா பீவி வீட்டார் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2016ல் சுமையா பீவியை முகமது பர்கான் அபுதாபிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை பணிக்கு அனுப்பாமல், கூடுதல் வரதட் சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சுமையா பீவியை ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கணவர் வீட்டார் அவரை சரியாக கவனிக்காமல் அடித்து துன்புறுத்தியதோடு, பெற்றோர் வீட்டுக்கு சென்று கூடுதல் பணம் வாங்கி வர வேண்டும் என கூறியுள்ளனர்.இந்தநிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பிறகு அவரது நகைகள் மற்றும்பணத்தை பறித்துக் கொண்டு அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு துரத்தி உள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த சுமையாபீவி மார்த்தாண் டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

போலீசார் சுமையா பீவியின் கணவர் முகமது பர்கான், அவரது தாயார் பாத்திமா நூஹ், தந்தை முகமது நூஹ், சகோதரிகள் முகமது பர்சீன், முகமது பர்சானா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top