சென்னையில் குடும்ப தகராறில் கோபமடைந்த மனைவி, கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பூர் திருவிக நகரில் வசித்து வருபவர்கள் கணவன் உபயத்துல்லா, மனைவி நஸ்ரி. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததால் அவ்வப்போது சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஞாயிறன்று இவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதால், மிகவும் கோபமடைந்த மனைவி நஸ்ரின், அடுப்பில் சூடாக இருந்த எண்ணெய்யை கொண்டு வந்து கணவர் மீது ஊற்றினார். உடனே அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கதினர், உடல் முழுவதும் வெந்த நிலையில் இருந்த உபயத்துல்லாவை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே நஸ்ரின் தப்பிச் சென்றுவிட்டார்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட திருவிகா நகர் போலீஸ், தலைமறைவாக இருந்த நஸ்ரினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
0 Comments