காவேரிப்பட்டினத்தை சேர்ந்த அசோக் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு லாரியை ஓட்டிச் சென்றார். கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் பர்கூரை சேர்ந்த செண்பகவள்ளி என்ற பெண் கட்டண ஊழியர் லாரியை நிறுத்தினார். ஏடிஎம் ஸ்வைப்பிங் கருவியை வாங்கிய அசோக் ரகசிய எண்ணை மெதுவாகப் பதிவு செய்ததில் இருவரும் வாய் தகராறு ஏற்பட்டது. ஏடிஎம் பின் நம்பரை ரகசியமாக கண்காணித்ததாக ஓட்டுநர் கூறியதே இந்த தகராறுக்கு காரணம்.
லாரி ஓட்டுநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கோபம் அடைந்த செண்பகவள்ளி, தனது கையிலிருந்த ஸ்வைப்பிங் கருவியால் அவரது தலையில் பலமாக தாக்கியதில் லார்ரி ஓட்டுனரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதையறிந்து சக லாரி ஓட்டுநர்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டனர். இதனையறிந்து அங்கு வந்த காவல்துறையினர் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
0 Comments