நாகர்கோவில் அறுகுவிளையை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவருடைய மனைவி பார்வதி (46 வயது). இவர் கட்டிட வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பார்வதி தினமும் காலையில் வேலைக்கு செல்லும் அந்த பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தை கடந்து தான் செல்ல வேண்டும். நேற்று காலையும் பார்வதி வேலைக்கு செல்ல புறப்பட்டு தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியே வந்த ரயில் அவர் மீது மோதியது. ரயில் வேகமாக மோதியதில் பார்வதியின் உடல் துண்டு துண்டாக சிதறின. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உடனே நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்து அங்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் பார்வதியின் உடலை எடுத்து அதை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயில் மோதியதில் பெண்ணின் உடல் சிதறி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments