பூதப்பாண்டியை அடுத்த நாவல்காடு மந்தாரபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(36). அதே பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் ரிச்சர்ட்(31), உறவினர்களான இருவருக்கும் ஏற்கனவே தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஆல்வின் ரிச்சர்ட், முருகேசனை தகாத வார்த்தைகளால் பேசி கல்லால் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த முருகேசன் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் ஆல்வின் ரிச்சர்ட் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை பல இடங்களில் காண முடிகிறது .
0 Comments