இரணியல் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம்!

இரணியல் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம்!

in News / Local

இரணியல் அருகே இரணியல் கோணம் பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார் (30). கொத்தனார். இவருக்கு கடந்த 4 ஆண் டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவருக்கு நந்தினி(24) என்ற மனைவியும், கிரிஜா (3) என்ற மகளும் உள்ளனர். கிரிஜா அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தார். கடந்த 29ம் தேதி மாலை 3 மணிக்கு நந்தினி மகளை அழைத்து வருவதாக கூறி சென்றார். ஆனால் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை . இது குறித்து அஜித் குமார் இரணியல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து நந்தினி, குழந்தை இருவரையும் தேடி வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top