நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் வசித்து வரும் அருண் பிரபு என்ற நபர் ஆட்டோவை வைத்தே அழகிய முறையில் வீடு கட்டி உள்ளார்.
இதில் ஒரு சாதாரண வீட்டைப் போன்றே சமையலறை கழிவறை கம்ப்யூட்டர் பயன்படுத்தும் வசதி மின்விளக்கு மின்விசிறி தண்ணீர் சூடு செய்வதற்கான இடம் துணி காயப்போட ஏதுவான வசதி மேல்மாடி என அனைத்து வசதிகளும் உள்ளடங்கிய வீட்டையே அவர் தயாரித்துள்ளார்.
இதனை கட்டி முடிக்க அவருக்கு ஐந்து மாதங்கள் தேவைப்பட்டது.
இதற்கு அவர் பயன்படுத்திய தொகை ரூபாய் ஒரு லட்சம் மட்டுமே. இதுவரை யாரும் செய்யாத அளவுக்கு இந்த இளைஞரின் முயற்சி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இளைஞரின் இந்த முயற்சிக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
0 Comments