மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார்.
மும்பையில் நடைபெற்ற சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கூட்டணி தலைவராகவும், முதலமைச்சராகவும் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூன்று கட்சிகள் இடையே கூட்டணி எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து, கூட்டணி தலைவராக தேர்வான உத்தவ் தாக்கரே ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். மேலும், உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்கும் விழா டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments