மகாராஷ்டிரா சட்டப்பேரவை கூட்டத்தை நாளை 8 மணிக்கு கூட்டுவதற்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். முதல் கூட்டத்தில், புதிய உறுப்பினர்களுக்கு இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கொலம்ப்கர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
முன்னதாக, மும்பை ஆளுநர் மாளிகையில் மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் பதவியேற்றுக் கொண்டார். மேலும், மகாராஷ்டிரா முதலமைச்சராக வரும் 1ஆம் தேதி உத்தவ் தாக்கரே பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments