அரசு முறை பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரசர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் மற்றும் பிற பிரதிநிதிகளை ரியாத்தில், சந்தித்தார்.
பிரதமர் நரேந்திரமோடி 2 நாள் அரசு முறை பயணமாக சவுதி சென்றுள்ளார். தனி விமானம் மூலம் நேற்றிரவு ரியாத்தை சென்றடைந்த பிரதமர் மோடிக்கு ரியாத் ஆளுநர் மற்றும் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியா - சவுதி அரேபியா நாடுகள் இடையேயான ஒத்துழைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்தி மோடி பேட்டி ஒன்றில் ஒன்றில் தெரிவித்தார்.
இந்த நிலையில், ரியாத்தில் சவுதி அரசர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத்தை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
0 Comments