மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது!

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது!

in News / Politics

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பது யார் என்ற இழுபறி நீடித்து வந்த நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

மகாராஷ்டிராவில் சட்டப்படி ஆட்சியமைக்க கூடிய சூழல் இல்லை என ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியிருந்தார். ஆளுநரின் அறிக்கையை ஆராய்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ராம்நாத் கோவிந்துக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்திருந்தது.

இந்த நிலையில், மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் அளித்தார். மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க எந்தக்கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை இல்லாததால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top