ஆளுநரின் செயலாளராக இருந்த ராஜகோபாலை தமிழக தகவல் ஆணையராக நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.
ராஜகோபால் ஐஏஎஸ், தமிழக தகவல் ஆணையராக அடுத்த 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார். 1984ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த ராஜகோபால் குமரி மற்றும் விருதுநகரில் ஆட்சியராக பணிபுரிந்துள்ளார்.
ஆளுநர் செயலராக இருந்த ராஜகோபாலுக்கு பதிலாக ஆனந்த்ராவ் விஷ்ணூ பாட்டீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
0 Comments