மக்களவையில் நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு பிரச்சனை தொடர்பான விவாதத்தின் போது, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தூங்கியது போன்ற காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் சீனாவால் எல்லையில் நிகழும் அச்சுறுத்தல் தொடர்பாக மக்களவையில் விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, அண்டை நாடுகளால் விடுக்கப்படும் அச்சுறுத்தல் மற்றும் ஊருடுவல் தொடர்பாக மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அப்போது அவருக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த ராகுல் காந்தி, கன்னத்தில் கைவைத்தபடி கண்ணை மூடிக் கொண்டிருந்தார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாக பரவியது, இதனால் இந்த வீடியோ கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
0 Comments