திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி., சசிதரூர், கேரளாவில் ஒரு குறிப்பிட்ட சமூக பெண்களை இழிவுபடுத்தி புத்தகத்தில் எழுதியதாக தொடரப்பட்ட வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கைது வாரண்ட் பிறப்பித்து திருவனந்தபுரம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சந்தியா என்ற பெண் தாக்கல் செய்துள்ள மனுவில், தி கிரேட் இன்டியன் நாவல் " என்ற புத்தகத்தில் ஒரு குறிப்பிட்ட சமூக பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் எழுதுப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் சசி தரூர் ஆஜராகாததால் அவ்ருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நேற்று ஆஜராக தவறியதால், சசிதரூர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
0 Comments