கென்யாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 60 பேர் பலி!

கென்யாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 60 பேர் பலி!

in News / International

கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில், கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கென்யாவின் வடமேற்கு பகுதியில், உகாண்டா எல்லையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலைகள், கட்டிடங்கள் மற்றும் பாலங்கள் கடும் சேதமடைந்தன.

இந்த நிலச்சரிவில் சிக்கி 7 குழந்தைகள் உள்பட 60 பேர் உயிரிழந்தனர். மேலும் காணாமல் போன 7 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. இது குறித்து வடக்கு மாகாண கவர்னர் ஜான் க்ராப் கூறியபோது, “நேற்று இரவு கண்டதைப் போன்ற அவலங்களை நாங்கள் இதுவரை கண்டதில்லை” என்றார்.

காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் பணியில் தன்னார்வலர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top